Thursday, June 12, 2014

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 5 : குடியம் குகை


பெரிய குகையில் இருந்து மலையின் மேல் குறிப்பிட்ட தூரம் சென்ற பின் பாறைகள் இடம் மற்றும் வலப்புறம் சென்றன வலப்புறம் இரு பெரும் பாறைகள் இருந்தன 20 அடி தூரத்தில் பாதை முடிவுற்றது. இடப்புறம் செல்லும் பாதையில் திரும்பி குறிப்பிட்ட தூரம் கடந்த பின் பாதைக்கான தடம் இல்லை, கையில் ஆயுதம் ஏதும் இல்லாத நிலையில் செடி கொடிகளை விலக்கி மேற்கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை, பாறைகள் மேல் ஏறலாம் என எண்ணி 20 அடி உயரம் உள்ள பாறை பிடித்து மேலே ஏறலானேன் கைவசம் இருந்த பிளாஸ்டிக் கயிறு கொண்டு மேலே ஏறியதும் காமிரா பைகளை தூக்கி கொண்டு மேலே சென்றால் ரத்த காயங்கள் மேல் விழுந்த வெயிலின் உக்கிரம் அப்போது தான் உரைத்தது.

மேலே இருந்து குகையை பார்த்த பின்பு வெற்றி என்று கத்த முடியாத அளவுக்கு தாகம் தொண்டையை அடைத்தது, மொபைலிலும் சிக்னல் இல்லை, நான் வந்து போனதற்க்கு அடையாளமாக ஏதும் விட்டு வரவிட்டாலும், புகைப்படங்கள் எடுத்து வந்தேன்.

படத்தின் இடப்பக்கம் குகையின் ஆரம்பத்தில் வெள்ளை வண்ணத்தில் புள்ளியாக தெரிவது உடன் வந்திருந்த நபர்கள் புள்ளியை ஒரு அளவுகோலாக வைத்து குகையின் நீளம், அகலம், உயரத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள்.



இடப்பக்கம் பச்சை வண்ணத்தில் நடுவே தெரியும் கோடு நாங்கள் வந்த பாதை



பனோரமா வியூ
படத்தை பெரிய அளவில் பார்க்க Click செய்யவும்
 

1 comment:

  1. சிறப்பு மிக்க பதிவு. உங்களின் தொல் தமிழர் பற்றிய தேடல், ஆய்வு, களப்பணி, குகை ஆராய்ச்சி, புகைப்பட பதிவுகள் அனைத்திற்கும் நன்றி. தொடர்ந்து பயணியுங்கள். எதிர்கால சமுதாயம் நிறைய பயன் பெரும் உங்களின் பணியால். ஒரு சிறிய ஆதங்கம். இயன்றால் சற்று வரலாற்று தகவல்களையும் இணைத்து தாருங்கள். இணைப்பு செய்திகளையும் கொடுங்கள். பயன் பெறுவோம். நன்றி. பாராட்டுக்கள்.

    ReplyDelete